Chennai Weather: மிரட்டும் கனமழை; கிடுகிடு உயர்வில் நீர் நிலைகள் - விவசாயிகள் ஒரே குஷி!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றனர்.

 


கனமழை எச்சரிக்கை



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.



 


போக்குவரத்து பாதிப்பு



பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலங்கள், முக்கிய சாலைகளை தண்ணீர் மூழ்கடித்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.



 


வீராணம் ஏரி



சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் மற்றொரு ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 1,000 மில்லியன் கன அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கனமழையால் ஏரிக்கு 1,182 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.



 


கீழணை